PSA

Psalm 57

Title

לַמְנַצֵּ֣חַ אַל תַּ֭שְׁחֵת לְדָוִ֣ד מִכְתָּ֑ם בְּבָרְח֥וֹ מִפְּנֵי שָׁ֝א֗וּל בַּמְּעָרָֽה

IRV

தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

1எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்;

உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது;

பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.

2எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.

3என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது,

அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா).

தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.

4என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது;

தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்;

அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது.

5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;

உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

6என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்;

என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)

7என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது,

தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.

8என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்;

அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.

9ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;

தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

10உமது கிருபை வானம்வரையும்,

உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது.

11தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;

உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

Matthew Henry's chapter overview

Introduction

Psalms 57

This psalm is very much like that which goes next before it; it was penned upon a like occasion, when David was both in danger of trouble and in temptation to sin; it begins as that did, "Be merciful to me;" the method also is the same. I. He begins with prayer and complaint, yet not without some assurance of speeding in his request (Psa 57:1-6). II. He concludes with joy and praise (Psa 57:7-11). So that hence we may take direction and encouragement, both in our supplications and in our thanksgivings, and may offer both to God, in singing this psalm.

To the chief musician, Al-taschith, Michtam of David, when he fled from Saul in the cave.

Cross-references: Ps 57:1 · Ps 57:7